பொதுநலனுக்காக போராடினால் தேசத்துரோக வழக்கா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சுற்றுச்சூழல் அக்கறையாளர் திஷா ரவி என்ற மாணவி கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இந்த நிலையில் திஷா ரவி கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.

பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

ம.பி.யில் நடந்த பயங்கரம்… பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

நல்லா இருக்கு ஆஷ்… கோலியின் தமிழை பார்த்து வாயை பிளந்த இன்னொரு வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது

அருவியில் ஆனந்தக்குளியல் போடும் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் வீடியோ

விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல்களில் நடித்த நடிகையுமான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது 

2 வருடத்திற்கு பிறகு முதல் விக்கெட்… உணர்ச்சியில் அழத் தொடங்கிய வீரரின் வைரல் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருக்கும் குல்தீப் யாதவ் சிறந்த ஸ்பின் பவுலராக அறியப்படுகிறார்

சாம்ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல நடிகை: டைட்டில் அறிவிப்பு!

'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சாம்ஜோன்ஸ் தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது