தமிழக முதல்வருக்கு வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அவருக்கு பல முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசனும் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார்.

கமலஹாசன் தனது பாணியில் வித்தியாசமான பிறந்தநாளை தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எப்போதும் புன்னகையுடன் கூடிய முகத்துடன் இருப்பது குறித்து குறிப்பிட்டுள்ள கமலஹாசன் அந்த புன்னகை மக்களின் முகத்திலும் பரவ செய்ய வேண்டும் என்று கூறியதோடு மக்கள் வாழ்த்தே ஆயுளை கூட்டும் என்றும் மறைமுகமாக மக்களின் கோபத்தை குறிபிட்டுள்ளார். கமலஹாசனின் இந்த வாழ்த்து குறித்து பல்வேறு அர்த்தம் கற்பித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாள் வாழ்த்தில் கூட பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்பது கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்ற கமெண்ட்டும் அதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூபெல்லா நோய்த்தொற்றை விருந்து வைத்து அழைத்தார்களா??? ஆச்சர்யமூட்டும் அணுகுமுறை!!!

தட்டம்மை போன்று தோலில் பொரி பொரியாகக் கொப்பளங்களை தோற்றுவிக்கு&#

இனி, கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும்!!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!!

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது

பெட்ரோல் இவ்வளவு மலிவா??? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிறுவனம்!!!

பிரிட்டனில் உள்ள பிரபல பெட்ரோல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சல்லிசாக பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது.

பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்!!! அச்சமூட்டும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிக&

ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய்