பிக்பாஸ் முடிஞ்சதும் நேரா காட்டுக்கு போயிடுவேன்: கமலிடம் சொன்ன போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 98 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் உச்சகட்ட விறுவிறுப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில், ‘பிக்பாஸ் முடிந்த பின்னர் போட்டியாளர்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள்’ என்பது குறித்த கேள்வியை கமல்ஹாசன் கேட்கிறார்.

இந்த வாரம் வெளியேறும் ஷிவானியிடம் கமல் முதலாவதாக இந்த கேள்வியை கேட்டபோது அவர், ‘எதுவும் நான் பிளான் பண்ண வில்லை’ என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார். 100 நாட்கள் இங்கே இருந்ததால் மன அழுத்தத்திலிருந்து விடுபட கோவா போகலாம் என்ற திட்டம் உள்ளது என்று பாலாஜி கூறுகிறார்.

எனக்கு ஒரு பாடி மசாஜர் வேண்டும் என்று ரம்யா கூற, தன்னுடைய ’குட்டு’வுடன் வாக்கிங் செல்ல வேண்டும் என்றும் சோம் கூறுகிறார். ஆனால் அவருடைய குட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டது அவருக்கு இன்னும் தெரியாமல் உள்ளது பரிதாபம்தான்.

இதனை அடுத்து ஆரி தன்னுடைய குழந்தையுடன் நேரம் செலவழித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது என்றும், முதல் வேலையாக குழந்தையுடன் விளையாட போவதாக அவர் கூறுகிறார். இதனை அடுத்து ரியோ கூறியபோது ’வீட்டுக்கு போனதும் சாப்பிட்டு வண்டியை எடுத்துட்டு ஏதாவது காட்டுக்குள் போய் விடுவேன்’ என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர்.