தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 முதல் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் அளித்த பதில்களில் இருந்து ஒரு தொகுப்பு:

‘நான் இங்கு தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்கவே வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை. நீங்கள் வாருங்கள் என்று கூறவே வந்துள்ளேன். நாட்டு நடப்பைக் கவனிப்பது மாணவர்களின் கடமை.

சும்மா இருங்கள், எதுவும் பேசக் கூடாது என்பது ஜனநாயகமா. வாக்குகள் என்பது வியாபாரம் செய்வதற்கல்ல. அவற்றை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

திரையுலகில் கால்பதிக்கும்போது நான் இயக்குநராக ஆசைப்பட்டேன். ஆனால், இயக்குநர் பாலச்சந்தர் என்னை மாற்றினார்.

அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை மாணவர்கள் பார்க்க வேண்டும். நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான்.  

அமைதியான முறையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்ற முறையில் காந்திதான் எனக்குப் பிடித்த தலைவர். அதேபோல், கமராஜர், பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களையும் எனக்குப் பிடிக்கும்.

சாத்தியம் என்பது சொல் அல்ல செயல். அன்பே சிவம், வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. பத்மாவத் படத்தின் பெயரால் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது

இவ்வாறு கமல்ஹாசன் கூறினர். 

More News

விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைமுன்னோட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இந்த ஆண்டின் முதல் படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'

நார்வே தமிழ் திரைப்பட விழா: விருதுகளை அள்ளிய 'அருவி'

ஒவ்வொரு ஆண்டும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களும், அவர்களுக்கான தொகையும்

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் அஸ்வின், மெக்கல்லம், பிராவோ, உள்பட சில வீரர்களை ஏலம் எடுத்த அணி மற்றும் அவர்களுக்கான தொகை

தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன்சிங்

ஐபிஎல் போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் இன்று பெங்களூரில் நட்ந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வினை மிஸ் செய்தது. அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் அள்ளிக்கொண்டது

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் குறித்து விஜய்சேதுபதி

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்த விஜயேந்திரர், தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையாகி வருகிறது.