close
Choose your channels

'தீர விசாரிப்பதே மெய்': பிரதீப் பதிவுக்கு கமல்ஹாசனின் பதில்.. புரமோ வீடியோ வைரல்..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீர விசாரிப்பதனாலே வந்த தீர்வு, இது தீர்ப்பு அல்ல.. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி. குற்றச்சாட்டியவர்கள் யோக்கியமா? அந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும், அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று கமல்ஹாசன் இன்றைய புரமோ வீடியோவில் கூறியுள்ளார்

’தீர விசாரிப்பதே மெய்’ என தனது ஒருதலைபட்சமான வெளியேற்றம் குறித்து பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருந்த நிலையில் ’தீர விசாரிப்பதனால் வந்த தீர்வு, இது தீர்ப்பு அல்ல என கமல்ஹாசன் கூறியதில் இருந்து அவர் முடிவை நியாயப்படுத்தியுள்ளார். மேலும் குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி, பிரதீப் குற்றம் செய்தவர் என்பதையும் கமல் உறுதி செய்கிறார்.

ஆனால் அதே நேரத்தில் குற்றம் சுமத்தியவர்கள் மீதும் தவறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட கமல்ஹாசன் அவர்களையும் இன்றைய எபிசோடில் கண்டிப்பார் என்பதையும் இந்த ப்ரோமோ வீடியோ உறுதி செய்துள்ளது.

மொத்தத்தில் பிரதீப் மீண்டும் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றே இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பாக கமல்ஹாசன், மாயா குரூப்பினர்களை இன்று வறுத்தெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment