'தேவர் மகன் 2' குறித்து கமல்ஹாசன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் அவர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் 'தேவர் மகன் 2' படம் குறித்த அறிவிப்பை நேற்று கமல்ஹாசான் அறிவித்துள்ளார்.

கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான 'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சேலத்தில் மக்கள் முன் அளித்த கலந்துரையாடல் ஒன்றில் 'தேவர் மகன் 2' படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார்.

கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில் #ThevarMagan2 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்று கொடுத்த 'தேவர் மகன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

More News

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58

'சர்கார்' உடன் தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்துடன் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா',

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்ட வேண்டும்: பிரபல நடிகர்

பிரபல மலையாள நடிகர் கொல்லம் துளசி என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'மீ டூ' பிரச்சனையால் படத்தில் இருந்து விலகிய '2.0' பட நடிகர்

உலகம் முழுவதும் 'மீ டூ' என்ற ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் உள்பட பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.