முத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல்ஹாஸன்

  • IndiaGlitz, [Sunday,August 14 2016]

பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் மறைவால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் நிலையில் அவரது மறைவிற்கு கோலிவுட்டின் பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மரணம் என்பது அனைவருக்கும் நிகழ்வதுதான் என்றாலும் 41வயதில் மரணம் என்பது கொடுமையிலும் கொடுமை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் முத்துகுமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நியாயமில்லை. "41 சாகும் வயதில்லை ந.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன்னலம்பேணாத் தற்கொலையால் கோபமே. எனினுமவர் கவிக்கும் நட்பிற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது சமூக வலைத்தளத்தில், 'ஏன் முத்து அதுக்குள்ள ... இவ்வளவு அவசரம்? வணக்கம் வாழ வைக்கும் சென்னை, தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ...பாடல்கள் தந்த கவியே !!! ஆழ்ந்த வருத்தங்கள்' என்று பதிவு செய்துள்ளார்.

More News

'தனி ஒருவன்' நிறுவனத்துடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது...

கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் பார்த்திபனின் இன்னொரு வாரிசு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், சிறந்த மேடைப்பேச்சாளர், கவிஞர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'...

விஜய்யின் தெறி'க்கு அடுத்து கார்த்தியின் 'காற்று வெளியிடை

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பைலட் வேடத்தில் கார்த்தி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே...

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகையின் மகள்

சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

அருண்விஜய்யின் 'டீலுக்கு' கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் 'விக்டர்' என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்த பின்னர் கோலிவுட் திரையுலகில் அருண்விஜய்யின்...