'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு எப்போது? கமல் தகவல்

  • IndiaGlitz, [Monday,September 12 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு கமல்ஹாசனுக்கு எதிர்பாராத விபத்து நேரிட்டது.
கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கமல், தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ள நிலையில் கமல்ஹாசன் இதற்கான பதிலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் முதல் என் வழக்கமான பணிகளை தொடரலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அனைவரின் வாழ்த்துக்கள்தான் என்னை விரைவில் பூரண குணமடைய செய்துள்ளது. அனைவருக்கும் நன்றி. விரைவில் சபாஷ் நாயுடு' படப்பிடிப்பிற்கு திரும்புவேன்' என்று கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் முதல்முறையாக கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.