கமல்-மெளலியின் 'மெய்யப்பன்' செய்தி மெய்யா? பொய்யா?

  • IndiaGlitz, [Tuesday,November 29 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் மெளலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியில் சிறிதும் உண்மையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசனை மெளலி சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் இந்த சந்திப்பு நட்புரீதியானது என்றும், இந்த சந்திப்பில் இருவரும் இணைந்து திரைப்படம் எடுப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தற்போது முழு அளவில் குணமடைந்து விட்டதால் வரும் டிசம்பர் 15 முதல் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இந்த படம் முடிந்த பின்னரே அவர் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

விஜய்-அட்லி படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு சிம்பு தரும் கிறிஸ்துமஸ் விருந்து

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிம்புவின் அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமன்னாவுடன் இணையும் சுஹாசினி-ரேவதி

பிரபுதேவாவுடன் தமன்னா நடித்த 'தேவி' மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'பாகுபலி 2'...

கே.வி.ஆனந்த் மீது 'கவண்' நடிகர்கள் செய்த புகார்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'கவண்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

கள்ளத் தொடர்புக்கு சட்டப்படி என்ன தண்டனை தெரியுமா?

ஐபிசி என்று அறியப்படும் இந்திய தண்டனை சட்டத்தில் என்ன குற்றம் செய்தாலும் அதற்குரிய தண்டனையை வகுத்துப்பட்டுள்ளது...