ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? கமல் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,May 26 2016]


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்த வில்லன் கேரக்டருக்கு அர்னால்ட், விக்ரம், உள்பட பல நடிகர்கள் பரிசீலனை செய்யப்பட்டபோதிலும் ஷங்கர் முதலில் இந்த கேரக்டருக்கு அணுகியது உலக நாயகன் கமல்ஹாசனைத்தான். ஆனால் அவர் இந்த படத்தின் கேரக்டரை ஏற்க மறுத்துவிட்டார். ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்ததன் உண்மையான காரணத்தை சமீபத்தில் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'2.0 படத்தில் வில்லன் கேரக்டர் என்பதற்காக நான் நடிக்க மறுக்கவில்லை. எத்தனையோ படங்களில் நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நான் நடிக்க மறுத்ததன் காரணம் நானும் ரஜினியும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம்தான். இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக இருந்தால் அந்த படத்தை எங்கள் இருவரில் ஒருவர் தயாரிக்க வேண்டும். இதுதான் எங்களுடைய ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் காரணமாகவே '2.0' படத்தில் நடிக்கவில்லை என்று கமல் விளக்கமளித்துள்ளார்.

More News

நயன்தாராவை லேடி சூர்யா என்று அழைப்பது ஏன்? பாண்டிராஜ்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'இது நம்ம ஆளு' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்தும், இதில் நாயகியாக நடித்த நயன்தாரா குறித்தும் இயக்குனர் பாண்டிராஜ் மனம் விட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் அதிரடி முயற்சியால் திருட்டு டிவிடி கும்பல் தலைவன் கைது

தமிழ்த் திரையுலகை தற்போது ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் ஒரே பிரச்சனை திருட்டுடிவிடி பிரச்சனைதான்...

அஜித்-ஷாலினியை அடுத்து வெளிநாடு செல்லும் ஷாமிலி

தல அஜித், மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் ஓய்வு எடுப்பதற்காக சமீபத்தில் வெளிநாடு சென்றார் என்ற தகவலை ஏற்கனவே பகிர்ந்தோம்...

ஸ்ரீதிவ்யாவின் பிறந்த நாள் குழப்பம்

பிரபல நடிகர் கார்த்தி, பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஆகியோர் இன்று தங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்....

இது நம்ம ஆளு' படத்தில் சிம்புவும் நயனும் நடிக்கவே இல்லை : பாண்டிராஜ்

சிம்பு, நயன்தாரா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் 27ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பாண்டியராஜ் கூறியபோது...