நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின்விளைவுகள் கடுமையா இருக்கும்: கமலின் எச்சரிக்கை யாருக்கு?

நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தையின் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரை கமல்ஹாசன் எச்சரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் மழைக்காலம் முடிந்துவிட்டது என்றும், வெயில் காலம் ஆரம்பித்து விட்டது போட்டியாளர்களை கன்ஃபக்சன் அறைக்கு அழைத்து விசாரிப்போம் எனவும் கமல்ஹாசன் கூறியதில் இருந்தே அவர் காட்டமாக சில கேள்விகளைக் கேட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய இரண்டாம் புரமோவில், ‘நிரூப் பிரியங்கா நீங்கள் இருவரும் ரோப் டாஸ்க்கில் நன்றாக விளையாடினீர்கள். ஆனால் ஏன் திடீரென விட்டீர்கள் என நிரூப்பிடம் கேட்க, அதற்கு நிரூப், ‘நிரூப் கேப்டனாக வேண்டாம், இவன் நல்ல கேப்டனாக இருக்க மாட்டான் என்று ப்ரியங்கா கூறியதால் நான் கோபத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்’ என்று கூறினார்.

அப்போது கமல்ஹாசன், ‘பிரியங்கா அது என்ன உங்க யுக்தியா’ என கேட்க அதற்கு பிரியங்கா, ‘பக்கத்தில் பெண்கள் உட்கார்ந்து இருப்பதால்தான் என்னால் ஒன்றும் பண்ண முடியவில்லை என்று அவன் சொல்லிக்கொண்டே இருந்தான்’ என்று கூறினார். இதனை அடுத்து கமல்ஹாசன், ‘நீங்கள் யூஸ் பண்ணின வார்த்தைகளான டெவில், செல்பிஷ், ஆகியவற்றின் பின் விளைவு கடுமையாக இருக்கும்’ என்று கூற, நிரூப்பின் முகம் அதிர்ச்சியில் உறைந்ததை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இன்று பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் சரமாரியான கேள்விகள் காத்திருக்கின்றது என்று இன்றைய புரோமோவில் இருந்து தெரியவருகிறது.

More News

வடிவேலுவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

புத்தாண்டில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பு விருந்து!

2022 ஆம் ஆண்டின் புத்தாண்டு இன்னும் ஒரு வாரத்தில் வரவிருக்கும் நிலையில் அந்த தினத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்து காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வெற்றிப்பட இயக்குனரின் வெப்தொடரில் இணைந்த அஞ்சலி!

வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் இயக்கும் வெப்தொடரில் நடிகை அஞ்சலி இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிக்பாஸ்: ரூ.5 லட்சம் பணத்துடன் வெளியேறும் போட்டியாளர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்

இந்த உலகத்துக்கு ஒரு பிரச்சனை வந்துருக்கு: விஜய்சேதுபதியின் வைரல் வீடியோ!

இந்த உலகத்திற்கு ஒரு பிரச்சனை வந்து உள்ளது என விஜய்சேதுபதி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.