கமல்-லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

’மாநகரம்’ ’கைதி’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து, படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மே மாத மத்தியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷின் ‘விக்ரம்’ படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன் அதில் ஒரு சில மாற்றங்கள் செய்ய கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு லோகேஷ் கனகராஜ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பகத் பாசில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் வெளியாகும் சூப்பர்ஹிட் படத்தின் மூன்றாம் பாகம்!

தமிழில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் மூன்றாம் பாகம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

பூஜா ஹெக்டேவை அடுத்து இன்னொரு விஜய் பட நடிகைக்கு கொரோனா?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று

ஆக்சிஜனை காரணம் காட்டி வேஷமா? ஸ்டெர்லைட் குறித்து கடுமையாக விமர்சிக்கும் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை என்பது தாமிரத்தை உருக்கும் தொழிலுக்காக கடந்த 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

கேமிரமேனா வேலைக்கு சேர்ந்துடலாம் போல: சாக்சி அகர்வால் புகைப்படத்திற்கு நெட்டிசன் கமெண்ட்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்சி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

படப்பிடிப்பின் இடையில் பிரசாந்த்-யோகிபாபு செய்த வேலையை பாருங்கள்: வைரல் வீடியோ

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 'அந்தகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.