கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த சுப்பிரமணியன்

மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன

இந்த நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு வீடியோவில் 'ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், ஒரு சிறிய வெற்றி. ஆனால் எங்கள் மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால் அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையற்றது' என்று மத்திய அரசை எச்சரிக்கும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் இந்தி திணிப்புக்கு எதிராக தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் முட்டாள்களான கமலஹாசனும் திமுக தலைவர் ஸ்டாலினும் இந்தியை திணிப்பதாக அலறுகிறார்கள். இந்தி மொழியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாணவர்களிடம் விட்டுவிடலாம். அவர்களே முடிவு செய்யட்டும்' என்று தெரிவித்துள்ளார்,.

More News

விஜய்க்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நயன்தாரா!

Read more at: https://www.sify.com/movies/nayanthara-to-relax-her-policy-for-bigil-audio-launch-news-tamil-tjqkgobjieecd.html

அஜித் பட வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை: நடிகை டாப்சி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் பேசும் வசனங்களில் ஒன்றான 'நோ மீன்ஸ் நோ'

மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி

சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.

தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது