close
Choose your channels

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க உதவி செய்யும் ரஜினி, கமல் :  கார்த்தி தகவல்

Sunday, September 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த பொதுக்குழுவில் நடிகர் கார்த்தி கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து பொதுக்குழுவில் பேசினார்.

அப்போது அவர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக 29 கோடி கடன் வாங்கி இருப்பதாகவும் இந்த கடனை அடைக்க நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் நடிகர்கள் விஜய், தனுஷ் உட்பட சிலர் ஒரு கோடி ரூபாய் வீதம் பணம் தநதுள்ளதாக கார்த்தி தெரிவித்தார். இதில் விஜய் மட்டும் கடனாக இல்லாமல் நிதியாக தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கு வருமானம் இல்லை என்பதால் அதற்கு தனியாக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கார்த்தி கூறியுள்ளார்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவது காலதாமதம் ஆகியுள்ள நிலையில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் நிதிச் சுமை கூடுதலாக அதிகரித்துள்ளதாக கூறிய கார்த்தி நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment