ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து 

  • IndiaGlitz, [Sunday,October 27 2019]

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் பல அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்களும் சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என்று தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: ஆழ்துளைக் கிணற்றில் பள்ளம் தெரியாமல் சிறு குழந்தைகள் விழுவது ஒரு தொடர் அவலமாக தமிழத்தில் இருக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றி பெற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவதை குற்றமாகவும், அதற்கு பெருந்தொகையை அபராதமாகவும் அரசு விதிக்க வேண்டும்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீண்டு வரவேண்டும். ஆழ்துளை கிணறு விவகாரத்தில் பெற்றோர்கள் மற்றும் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

More News

ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்

ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன்

சுர்ஜித் மீட்பு விவகாரம்; முதல்வர், துணை முதல்வருக்கு போன் செய்த பிரதமர், லதா ரஜினி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ள நிலையில் அந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்திற்கு கனமழையா?

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது 

ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க

நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர்!

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் தாமு செய்த பிரார்த்தனை செய்து வருகிறார்.