கமல்-ரஜினி இருவருக்கும் சேர்த்தே 10% ஓட்டுதான் கிடைக்கும்: சாருஹாசன்

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

ஒருபக்கம் உலகநாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டார். அவர், வரும் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் போர் வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று கூறிய ரஜினியும் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார். 'காலா' படப்பிடிப்பு முடிந்தபின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல், ரஜினி இருவருக்கும் கிடைக்கும் வாக்குகள் எவ்வளவு என்பது குறித்து தனது கணிப்பை கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து கட்சி ஆரம்பித்தாலோ அல்லது தனித்தனியாக கட்சி ஆரம்பித்தாலோ மொத்தமாக இருவருக்கும் 10% வாக்குகள் கிடைக்கும் என்றும்  மீதி 90% வாக்குகள் அரசியல் கட்சிகளுக்கே கிடைக்கும் என்பதே தனது கணிப்பு என்று கூறியுள்ளார். எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கு கிடைத்த வாக்குகள் சினிமா என்பதையும் தாண்டி கிடைத்த வாக்குகள் என்றும் சினிமா பைத்தியத்தால் வாக்குகள் கிடைத்தது என்றால் ஜெயலலிதா இரண்டுமுறை தோல்வி அடைந்திருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சாருஹாசன் கூறியதில் இருந்து இனிமேல் திரைத்துறையில் இருந்து இன்னொரு முதல்வர் வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

More News

விஷால் கோரிக்கை நிராகரிப்பு: தீபாவளி படங்களின் நிலை என்ன?

நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் 64ஆம் ஆண்டின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பேசியபோது,

அர்ச்சகர் நியமனத்தில் கமல் காட்டும் அக்கறை

கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். சி.ஆர்.சரஸ்வதி 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் ஐந்து நாள் பரோலில் வெளிவந்த நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

மணிரத்னம் இயக்கும் தென்னிந்தியாவின் மல்டி ஸ்டார் படத்தின் விபரங்கள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்

'ஸ்பைடர்' படத்தின் கடந்த வார வசூல் எப்படி?

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் அமைந்த முதல் படமான 'ஸ்பைடர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற