ஓவியாவின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த முன்னணி நடிகர்

  • IndiaGlitz, [Friday,February 02 2018]

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான களவாணி படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன்பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தபோதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியால் உலக தமிழர்களிடையே பெரும்புகழ் பெற்றார்.

இந்த நிலையில் ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் ஓவியாவின் அடுத்த பட டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியாவின் அடுத்த படத்தின் டைட்டில் 'K2' அதாவது 'களவாணி 2. இந்த படத்தையும் சற்குணம் இயக்கவுள்ளார். விமல், ஓவியா மீண்டும் இணையும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்கள் அனைவரும் இரண்டாம் பாக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஓவியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்

 

More News

ஓடும் ரயிலில் நடிகைக்கு பாலியல் தொல்லை: உதவிக்கு வராத சக பயணிகள்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை சனுஷா. இவர் சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தபோது சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்

மத்திய பட்ஜெட் குறித்து கமல்ஹாசனின் காட்டமான விமர்சனம்

கிராமப்புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாகவும், மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது ஆறுதலாக உள்ளதாகவும் கூறிய கமல்,

ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துள்ளோம்: பட்ஜெட் குறித்து தமிழிசை

தமிழிசை செளந்திரராஜன்: இந்த பட்ஜெட் தாக்கல் என்பது ஐசியூவில் இருக்கும் நோயாளியை நார்மல் வார்டுக்கு கொண்டு வருவது போல இப்போது முன்னேற்றம் செய்து வந்துள்ளோம்.விரைவில் அதை நடக்க வைப்போம்

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?

இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.

அமலாபாலை சந்தித்தது ஏன்? கைதான தொழிலதிபர் வாக்குமூலம்

பிரபல நடிகை அமலாபால் நேற்று தன்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகேசன் என்ற 40வயது தொழிலதிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.