close
Choose your channels

பார்வையற்றவர்களுக்காக சிறப்பு சலுகை செய்த 'அதே கண்கள்' தயாரிப்பாளர்

Monday, January 30, 2017 • தமிழ் Comments
#
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலையரசன் நடிப்பில் சி.வி.குமார் தயாரித்த 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த குடியரசு தினத்தில் வெளியாகி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ கலையரசன் கண் பார்வையற்றவராக நடித்திருப்பதை அடுத்து இந்த படத்தை கண்பார்வையற்றவர்களும் தங்களது அகக்கண்கள் மூலம் பார்க்க தயாரிப்பாளர் சி.வி.குமார் ஒரு சிறப்பு காட்சியை அவர்களுக்காக ஏற்பாடு செய்தார். இந்த சிறப்பு காட்சிக்கு ஏராளமான கண்பார்வையற்ற மாணவர்கள் வருகை தந்து தங்கள் அகக்கண்கள் மூலம் படம் பார்த்து மகிழ்ந்ததோடு தயாரிப்பாளருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
கலையரசன், ஜனனி ஐயர், ஷிவேதா, பாலா சரவணன், அரவிந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment