பார்வையற்றவர்களுக்காக சிறப்பு சலுகை செய்த 'அதே கண்கள்' தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

கலையரசன் நடிப்பில் சி.வி.குமார் தயாரித்த 'அதே கண்கள்' திரைப்படம் கடந்த குடியரசு தினத்தில் வெளியாகி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோ கலையரசன் கண் பார்வையற்றவராக நடித்திருப்பதை அடுத்து இந்த படத்தை கண்பார்வையற்றவர்களும் தங்களது அகக்கண்கள் மூலம் பார்க்க தயாரிப்பாளர் சி.வி.குமார் ஒரு சிறப்பு காட்சியை அவர்களுக்காக ஏற்பாடு செய்தார். இந்த சிறப்பு காட்சிக்கு ஏராளமான கண்பார்வையற்ற மாணவர்கள் வருகை தந்து தங்கள் அகக்கண்கள் மூலம் படம் பார்த்து மகிழ்ந்ததோடு தயாரிப்பாளருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
கலையரசன், ஜனனி ஐயர், ஷிவேதா, பாலா சரவணன், அரவிந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

நிவின்பாலி-நட்டி நட்ராஜ் பட டைட்டில் அறிவிப்பு

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் தமிழ் படம் ஒன்றை அறிமுக இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி அறையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை. செல்போன் கேமிராவில் வீடியோ பதிவு

கேரள மாநிலத்தில் கள்ளக்காதல் ஜோடி தனத்தனியாக ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலையை இருவரும் தங்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

புனே இன்போசிஸ் அலுவலகத்தில் கேரள இளம்பெண் கொலை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலையான பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது புனே இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவை சேர்ந்த இளம்பெண் ரசிலா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...

'தல 57' படப்பிடிப்பின் புதிய அப்டேட்

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்கேரியா உள்பட ஒருசில ஐரோப்பிய நாடுகளிலும், ஐதராபாத்திலும் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது...

சென்னை பாக்ஸ் ஆபீஸில் தனி முத்திரை பதித்த 2 படங்கள்

சென்னை பாக்ஸ் ஆபீஸில் பொதுவாக பெரிய ஸ்டார் படங்கள் மட்டுமே சாதனை வசூலை புரிந்து வருகின்றன.