சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்த கலைப்புலி எஸ்.தாணு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகவும் முழுமையாக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இன்று காலை முதல் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் சூர்யாவின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் அடுத்த படமான ’வாடிவாசல்’ திரைப்படத்தை தயாரிக்க இருப்பதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’வாடிவாசல்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள கலைப்புலி எஸ் தாணு தனது வாழ்த்து கவிதை ஒன்றை சூர்யாவுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது

தம்பி...
இன்று உங்கள் பிறந்த நாள்
என்றும் அது சிறந்த நாள்
இனிய இந்நாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று
தேக பலம்
பாத பலம்
ஆயுள் பலம் பெற்று
வாழிய பல்லாண்டு

என்று தெரிவித்துள்ளார்

வாடிவாசல் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு சூர்யாவின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு சரியான விருந்தை கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவி குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவன்!

ஆந்திர மாநிலத்தில் மனைவி மற்றும் குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிபரையே வசைமாறிப் பொழியும் ஜோ பிடன்: அமெரிக்க அரசியல் நடக்கும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை விட தீவிரமாக அரசியல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.

75 ஆண்டு ஐ.நா வரலாற்றில் இதுவே முதல்முறை: பொதுக்குழுக் கூட்டம் பற்றிய பரபரப்பு அப்டேட்!!!

ஐ.நா. சபையின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க விருக்கிறது.

லாக்டவுனுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் தமிழக அரசு!!!

சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணமாக நகரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது இயலாத காரியம்.

பெண்ணாக வாழ தகுதியில்லாதவர்: 24 ஆண்டுகள் தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பணக்காரர்களுக்கு சிறுமிகள் உள்பட இளம் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி வந்த விபச்சார பெண்  புரோக்கர் ஒருவருக்கு 24 வருட சிறை தண்டனை