போலீஸ் எச்சரிக்கையை மீறி காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோ

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

தற்போது உலகம் முழுவதும் ஆபத்தான டிரெண்ட்டை ஏற்படுத்தி வருவது கிகி சேலஞ்ச் என்பது தெரிந்ததே. காரில் இருந்து திடீரென இறங்கி சாலையில் நடனமாடும் இந்த சேலஞ்சால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் நடந்து வரும் நிலையில் இந்த கிகி சேலஞ்சை நடிகைகள் உள்பட யாரும் செய்ய வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

போலீசாரின் இந்த எச்சரிக்கையையும் மீறி காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் கிகி சேலஞ்ச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த கிகி சேலஞ்ச் பிசியான சாலையில் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பான இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உடன் வீல்சேர் கிகி சேலஞ்ச் நடனம் ஆடும் காஜல் அகர்வால் கடைசியில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த கிகி சேலஞ்சை யாரும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால் தற்போது தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 'பாரீஸ் பாரீஸ்' என்ற படத்திலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி கேரக்டர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது.

சுவாரஸ்யமின்றி திணறும் பிக்பாஸ்: இனியாவது தேறுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிய போகிறது. ஆனால் கமல் உள்பட இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் மனதை தொட முடியவில்லை.

'சாமி 2' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

விக்ரம், கீர்த்தி சுரேஷ், நடிப்பில் ஹரி இயக்கி வந்த 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது முழுவீச்சில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது

நீ என்ன பெரிய இதுவா? வைஷ்ணவியின் உண்மை முகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் கூட பார்வையாளர்களின் நன்மதிப்பை பெறவில்லை என்பது இந்த நிகழ்ச்சியின் துரதிஷ்டமாக பார்க்கப்படுகிறது

திமுகவில் குடும்ப சண்டை ஆரம்பமா?

ஒரு கட்சியின் தலைவர் மரணம் அடையும்போது அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பதில் குழப்பம் வருவது வழக்கமான ஒன்றே.