என்.ஜி.கே படம் பார்ப்பவர்களுக்கு இரண்டு இன்ப அதிர்ச்சிகள்

  • IndiaGlitz, [Friday,May 31 2019]

சூர்யா நடித்த என்.ஜி.கே' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரண்டு இன்ப அதிர்ச்சிகள் கிடைத்தது.

'என்.ஜி.கே' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள அனைத்து திரையரங்குகளிலும் கார்த்தி நடித்த 'கைதி' படத்தின் டீசரும், ஜோதிகா நடித்த 'ராட்சசி' பட டீசரும் திரையிடப்பட்டுள்ளது. இது சூர்யாவின் ரசிகர்களுக்கு கிடைத்த போனஸாக கருதப்படுகிறது.

படுமோசமாக இருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேரும் ஜோதிகா, தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் அந்த பள்ளியை திருத்துவதுதான் 'ராட்சசி' படத்தின் கதை என அந்த படத்தின் டீசரில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் 'ராட்சசி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'என்.ஜி.கே', 'கைதி' மற்றும் 'ராட்சசி' ஆகிய மூன்று படங்களையும் ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

6 மணி நேரம் பப்ஜி விளையாடிய சிறுவன் பரிதாப மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் மொபைல்போனில் தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிய சிறுவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

என்.ஜி.கே' ரிலீஸ் தினத்தில் ரசிகர்களுக்கு சூர்யாவின் மெசேஜ்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'என்.ஜி.கே' திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில்

சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் சசிகுமார்!

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ்நாடு அரசியலில் குதிக்கின்றாரா ஸ்ரீரெட்டி?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திரை நட்சத்திரங்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது தெரிந்ததே

எனக்கு நேசமணின்னா யாருன்னே தெரியாது: ராதாரவி

உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் 'பிரெண்ட்ஸ்' நேசமணிக்கு பெயிண்டிங் காண்ட்ராக்ட் கொடுத்ததே ராதாரவி என்பதை யாரும் மறந்திருக்க முடியாது