தனுஷ் பட வில்லன் நடிக்கும் 5 மொழி திரைப்படம்: டைட்டிலை வெளியிட்ட அஜித் பட வில்லன்

  • IndiaGlitz, [Tuesday,August 25 2020]

தனுஷ் நடித்த ’மாரி 2’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினா தாமஸ் என்பது தெரிந்ததே. தமிழில் ஏற்கனவே ‘அபியும் நானும்’ என்ற படத்தில் நடித்துள்ள இவர் மலையாளத்தில் பிரபல ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டொவினா தாமஸ் நடிக்க இருக்கும் ஐந்து மொழி திரைப்படம் ஒன்றின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ’மின்னல் முரளி’ என்று வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டிலை நடிகர் கபிர் சிங் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் அஜித் நடித்த ’வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் திரைபடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் பசில் ஜோசப் என்பவர் இயக்கவுள்ளார். ஷான் ரஹ்மான் இசையில் சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தை சோபியா பால் என்பவர் தயாரிக்க உள்ளார்.

More News

திரையரங்குகள் திறப்பது குறித்து அதிர்ச்சி கருத்தை தெரிவித்த அமைச்சர்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை

மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூர்யாவின் முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது: கமல் வாழ்த்து கூறியது யாருக்கு?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று காலை முதல் தொடர்ச்சியாக

நித்தியானந்தா மீது அன்பை வெளிப்படுத்திய மீரா மிதுன்: கைலாசாவுக்கு செல்ல ஆசை என டுவீட்

பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை தான் உருவாகியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.