எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை: 'பாரத்' குறித்து கபிலன் வைரமுத்து

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

இந்தியா என்ற நம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற இருப்பதாகவும் அதற்காக வரும் செப்டம்பர் 18ஆம் தேதி சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தங்களுடைய கருத்தை பலர் தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் இது குறித்து கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’2030களில் இருந்து கால ரயிலில் ஏறி பின்னோக்கிச் செல்லும் இந்தியன் 1920 களின் சிறுவனிடம் பேசும்போது இந்தியாவின் பெயர் இப்படி மாறி இருக்கலாம் என்று நினைத்து எழுதினேன். அந்த எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற புத்தகத்தில் வரும் உரையாடலில் நீங்கள் எந்த ஊரு என்று ஒருவர் கேட்கும் போது ’பாரத்’ என்று இன்னொருவர் பதில் அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் 'அயலான்'? 2 பெரிய படங்களுடன் மோதுகிறதா?

சிவகார்த்திகேயன் நடிப்பில்,  ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'அயலான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதிக்கே எனது ஆதரவு: ரஜினி பட இயக்குனர் அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உதயநிதிக்கு

தந்தையை இழந்த இளம் பாடகி.. சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !!  

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில்,

80 வயது.. 47 வருட இசைப்பயணம்.. இன்றும் 8 படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா..!

இசைஞானி இளையராஜா கடந்த 47 ஆண்டுகளாக திரையுலகில் இசை அமைத்து வருகிறார் என்பதும்  ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் என்பது தெரிந்ததே.

10 வருடங்களுக்கு பின் இதுதான் ஃபர்ஸ்ட்.. ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ..!

பத்து வருடங்களுக்கு பின்னர் நேரடி தெலுங்கு படத்தில் இசையமைப்பதாக கூறியுள்ள நடிகரும் இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷ் அந்த படத்தின் சிங்கிள் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.