close
Choose your channels

என்னுடைய பிடிவாதம்தான் 'கபாலி' உருவாக காரணம் : ரஞ்சித்

Wednesday, July 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது கோடி ரூபாய் லாட்டரி சீட்டு விழுந்ததற்கு சமம். இந்த பொன்னான வாய்ப்பு பல சீனியர் இயக்குனர்களுக்கே இன்னும் கிடைக்காத நிலையில் இரண்டே படங்கள் இயக்கிய ரஞ்சித்துக்கு கிடைத்ததை எண்ணி கோலிவுட் கொஞ்சம் பொறாமையாக கூட பார்த்தது. ஆனால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக தலைகால் புரியாமல் ஆடாமல் நிதானமாக அதே நேரத்தில் தான் நினைத்தபடி அப்படியே படமாக்கியுள்ளார் ரஞ்சித்.
பொதுவாக ரஜினி நடிக்கும் படத்தில் அவருடைய ஆலோசனையை கேட்டு அவர் சேர்க்க சொன்னதை சேர்த்து, நீக்க சொன்னதை நீக்கும் இயக்குனர்கள்தான் இதுவரை இருந்துள்ளனர். ஆனால் ரஜினி கேட்டுக்கொண்டும் இந்த படத்தில் காமெடியை ரஞ்சித் புகுத்தவில்லை. அதேபோல் உடனே படப்பிடிப்பை ஆரம்பிக்க சொல்லி ரஜினி வற்புறுத்தியும் பிடிவாதமாக மூன்று மாத காலம் கதையை வடிவமைக்க அனுமதி வாங்கி அதன் பின்னர் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ரஞ்சித். இவருடைய பிடிவாதம்தான் இன்று உலகம் புகழும் 'கபாலி' நேர்த்தியாக உருவாக காரணமாக அமைந்துள்ளது என்று ரஞ்சித் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ரஜினி படம் என்றாலே பெரிய பெரிய டெக்னீஷியன்கள்தான் இடம்பெற்றிருப்பார்கள். ஆனால் ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்பட தனக்கு செளகரியாக உள்ள தொழில்நுட்ப கலைஞர்களை இந்த படத்திற்காக தேர்வு செய்தார். ரஜினியும் இதில் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment