'கபாலி' இயக்குனரின் அடுத்த ஆசை இதுதான்

  • IndiaGlitz, [Wednesday,July 13 2016]

இன்று உலகமே ஜூலை 22ஆம் தேதியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம் என்னவெனில் அது கபாலி' ரிலீஸ் தினம் என்பதால். இந்த படம் இந்த அளவுக்கு உலக அளவில் பிரபலமாக ஒரே காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அந்த சூப்பர் ஸ்டாரையே இயக்கிய ரஞ்சித்துக்கும் இந்த பெருமையில் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.
கோலிவுட்டில் இயக்குனராகும் ஒவ்வொருவருக்கும் ரஜினியை இயக்க வேண்டும் என்பது ஒரு ஆயுட்கால இருந்து வரும் நிலையில் ரஞ்சித்துக்கு அந்த வாய்ப்பு மூன்றாவது படத்திலேயே கிடைத்துவிட்டது.
இந்நிலையில் ரஞ்சித்தின் அடுத்த ஆசை என்ன தெரியுமா? தயாரிப்பாளராக மாற வேண்டும் என்பதுதானாம். ஒவ்வொருவருக்கும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கும். எனக்கும் அதுபோன்ற ஆசை உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்' என்று ரஞ்சித் கூறியுள்ளார். ரஞ்சித்தின் இந்த ஆசையும் விரைவில் நிறைவேறும் என்று நம்புவோம்.

More News

இரண்டே நாட்களில் 'இருமுகன்' டீசர்.

சீயான் விக்ரம் முதன்முதலாக இருவேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில்...

சமுத்திரக்கனியின் 'அப்பா'வுக்கு கிடைத்த அடுத்த மரியாதை

சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்த 'அப்பா' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களால்...

'கபாலி' கவுண்ட் டவுன் ஆரம்பம். இன்னும் 8 நாட்களில் 'நெருப்புடா!!!

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் ரிலீசுக்கு முன்னர் ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு பிரமாண்டம் இருந்ததில்லை, இனிமேலும் இருக்க வாய்ப்பில்லை...

'அப்பா'வுக்காக சலுகைக்கட்டணம் வாங்கித்தந்த தலைமை ஆசிரியர்

சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து நடித்த 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது...

செஞ்சுரி அடித்தது சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு'

கடந்த வாரம் வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நான்கே நாட்களில் ரூ.13.5 கோடி வசூல் செய்தது...