ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், இந்த ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

துமாரி சூளு' என்ற பாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான 'காற்றின் மொழி' படத்தில் வித்யாபாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் லட்சுமி மஞ்சு, விதார்த் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யா 37: அல்லு சிரிஷூகு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகர்

நடிகர் சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

படப்பிடிப்பின்போது அமலாபால் காயம்: படப்பிடிப்பு ரத்து

நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிகை அமலாபால் 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமலாபாலுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு.

விஜய்யை அடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிரபல நடிகர்

கருணாநிதியின் மறைவின்போது அமெரிக்காவில் 'சர்கார்' படப்பிடிப்பில் இருந்த தளபதி விஜய், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.

விஜய், அஜித் குறித்த ஸ்ரீரெட்டியின் கமெண்ட்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி தலைப்பு செய்திகளில் இடம்பெற்றவர் என்பது தெரிந்ததே

நடிகை ரம்பாவுக்கு  வளைகாப்பு திருவிழா

பிரபல நடிகை ரம்பாவுக்கும் கனடா தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.