ஆட்டோவில் மரணம் அடைந்த 'காதல்' பட நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,March 23 2021]

பரத், சந்தியா நடிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’காதல்’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் நடிகர் விருச்சியகாந்த். இவர் தற்போது ஆட்டோவில் கண் திறந்த நிலையில் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மிகப்பெரிய வெற்றி பெற்ற ’காதல்’ திரைப்படத்தில் ஒரு காமெடி காட்சியில் விருச்சியகாந்த் நடித்து இருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற இவர் பேசிய வசனம் பிரபலமானது. அந்த வசனத்தில், ‘ஜோசியக்காரன் சொன்னார், விருச்சிகத்தையும் காந்தத்தையும் சேர்த்தால் பெரிய ஆளாக ஆவீர்கள் என்று, அதனால் தான் என்னுடைய பெயரை விருச்சியகாந்த் என்று மாற்றி விட்டேன். இனி நான் கண்டிப்பாக ஹீரோவாக வருவேன். நடித்தால் ஹீரோவாக நடிப்பேன், அதன்பின் அரசியல், சிஎம், அப்புறம் டெல்லி’ என்று ஒரு வசனத்தை பேசி இருப்பார்

இந்த வசனம் மிகப்பெரிய வைரல் ஆனது என்பதும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு பேருதவியாக இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விருச்சியகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிச்சை எடுத்ததாகவும் இதனைப் பார்த்த பலர் அவருக்கு உதவி செய்ததாகவும் செய்திகள் வெளியானது. அதன் பின்னரும் அவருடைய வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், கோவில்களில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. தற்போது அவர் ஒரு ஆட்டோவில் பரிதாபமாக கண் திறந்த நிலையில் மரணம் அடைந்து இருக்கும் காட்சி பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.

வெற்றிமாறனுக்கு கலைப்புலி தாணு செய்த கெளரவம்!

46 ஆவது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான

5 கோடி பார்வையாளர்களை கடந்து பட்டையைக் கிளப்பும் “என்ஜாய் எஞ்சாமி“ பாடல்!

சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியிடப்பட்டது.

இந்த கை மண்வெட்டி பிடித்த கை- பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

வரும் தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

20 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட ஏல மையம்… விவசாயிகளுக்காக முதல்வரின் புது திட்டம்!

கடந்த 21 ஆம் தேதி கிருஷ்ணகிரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பகுதியில் விளைகின்ற காய்கறிகள் தான் கேரளா