இஸ்ரோ தலைவராக முதன்முதலாக தமிழர் நியமனம்

  • IndiaGlitz, [Thursday,January 11 2018]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக முதன்முதலாக தமிழரான கே.சிவன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோ தலைவராக பணிபுரிந்து வரும் கிரண்குமார் நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய தலைவராக தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த கே.சிவன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையல் என்ற கிராமத்தில் விவசாயி மகனாக பிறந்த சிவன், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980ஆம் ஆண்டு பட்டம் பெற்ற கே.சிவன் அவர்கள், நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

நாளை முதல் இஸ்ரோவின் தலைவராக கே.சிவன் பதவியேற்கிறார். இந்த பதவியில் அமரும் முதல் தமிழர் இவர் என்பதால் தமிழகமே இவருடைய நியமனத்தை கொண்டாடி வருகிறது. குறிப்பாக அவருடைய சொந்த ஊரில் உள்ள பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

பிக்பாஸ் ஜூலியின் முதல் படத்தின் ஷாக்கிங் டைட்டில்

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழக மக்களிடம் புகழ் பெற்றவர் ஜூலி.

'நயன்தாரா' பெயரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்: அனிருத் ஆச்சரியம்

நேற்று சென்னையில் நடந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தொகுப்பாளினி அஞ்சனா கேட்ட கேள்விகளுக்கு அனிருத் விக்னேஷ் சிவனாகவும், விக்னேஷ் சிவன் அனிருத்தாகவும் மாறி பதிலளித்தனர்.

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம்: ரசிகர்கள் முன் பேசிய சூர்யா

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்திய இந்திய விமான பணிப்பெண் கைது

இதுவரை விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விமான பணிப்பெண் ஒருவரே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வைரமுத்து பேச்சால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல பாடகி

கவியரசு வைரமுத்து சமீபத்தில் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.