இந்த மாதிரி டைரக்டர் எல்லாம் ஒருநாளும் தேற மாட்டார்கள்: கே.பாக்யராஜ் பரபரப்பு பேச்சு

சமீபத்தில் கோலிவுட் திரையுலகில் கதைத்திருட்டு விவகாரம் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு திரைப்படம் வெளியாகவிருக்கும் கடைசி நேரத்தில் திடீரென ஒருவர் கிளம்பி இந்த படம் எனது கதை என எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுப்பது, நீதிமன்றம் செல்வது என பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்த பிரச்சனை மாஸ் நடிகர்களின் படங்களுக்கு அதிகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குனரும் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான கே.பாக்யராஜ் கதைத்திருட்டு விவகாரம் குறித்து பேசியதாவது: இப்போது எல்லாம் கதைத்திருட்டு என்று சொன்னால் யாரும் ஒப்புக்கொள்வதில்லை. திருட்டு என்று கூடச் சொல்லாமல் இதுவும், அதுவும் ஒத்துப் போகுது என்றுதான் சொன்னேன். சம்பந்தப்பட்டவரை கொச்சைப்படுத்தக் கூடாது, கவுரவக் குறைச்சலாக நடத்தக் கூடாது என்பதால் அப்படிச் சொல்லியும் கதைத்திருட்டு செய்தவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இந்த மாதிரி டைரக்டர்கள் ஒருநாளும் தேற மாட்டார்கள்’.

என்னதான் அடுத்தவர்களுடைய சட்டையை ஆல்ட்டர் செய்து போட்டாலும், பொருத்தமாக இருக்கும். ஆனால், அது பழைய சட்டைதான். எனவே வரும் தலைமுறையினர் கதைத்திருட்டை செய்யாதீர்கள். படத்தின் கதையைத் தழுவி என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் பண்ணினால் என்றைக்கும் தேறவே முடியாது. ரொம்ப நாள் நீடிக்கவும் முடியாது என்று கே.பாக்யராஜ் பேசியுள்ளார்.

More News

ஜெயலலிதாவை அடுத்து திரைப்படமாகும் கருணாநிதி வாழ்க்கை வரலாறு திரைப்படம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரீஸ் 'குயின்' என்ற பெயரில் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல்ஹாசனின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த தகவல்

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே வெளிவந்து உள்ளதால் கமல் ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாக காத்திருக்கின்றனர்.

உள்ளாட்சி பதவிகளில் வெற்றி வாகை சூடிய பெண்கள்

பெண்கள் கூட்டமாகப் பொது இடங்களில் பங்குகொள்ளும்போதும் பொதுப்பணிகளில் தங்களது கவனத்தைச் செலுத்தும்பொழுதும் பெரிய அளவிலான மாற்றங்களைக்கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உலகளவில் பரவலாகக் காணப்படுகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மென்பொருளை முடக்கப்போவதாக அறிவிப்பு

கணினிக்கான மென்பொருள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களே பெரும்பாலான கணினிகளில் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

போதை ஆசாமியிடம் சிக்கிய கருநாகம்: கொத்தி, கொத்தி உயிரிழந்த பரிதாபம்

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் போதை ஆசாமியிடம் சிக்கிய ஒரு பாம்பு அந்த நபரை கொத்தி, கொத்தி, கடைசியில் சோர்ந்துபோய் உயிரைவிட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது