ஜோதிகாவின் நாச்சியார்: ரூ.2 கோடியை நெருங்கிவிட்ட சென்னை வசூல்

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பாலா-ஜோதிகாவின் 'நாச்சியார்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் இரண்டாவது வாரமும் சென்னை உள்பட பெருநகரங்களில் திருப்திகரமான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் மட்டும் சென்னையில் 18 திரையரங்குகளில் 174 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.46,86,971 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் இரண்டாவது வாரத்திலும் 70% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் அதாவது பிப்ரவரி 16 முதல் 25 வரை ரூ.1,97,94,215 வசூல் செய்துள்ளது. ஜோதிகாவின் படம் சென்னையில் முதல் இரண்டு வாரங்களில் ரூ.2 கோடியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்ரீதேவி உடல் இந்தியா வர தாமதம் ஏன்?

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் இரவு துபாயில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு இந்திய திரையுலகையே உலுக்கியது.

என் கனவு பாத்திரம் 'மயிலு'க்கு உயிர் கொடுத்தவர் ஸ்ரீதேவி: பாரதிராஜா

16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் என இரண்டு ஸ்ரீதேவி நடித்த படங்களை இயக்கிய பாரதிராஜா, அவருடனான தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:

ஸ்ரீதேவியின் மலரும் நினைவுகள் குறித்து சிவகுமார்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஸ்ரீதேவியுடன் மூன்று படங்கள் நடித்த பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவரது மறைவு குறித்து கூறியதாவது:

நான் இரண்டுவிதமான ஸ்ரீதேவியை பார்த்துள்ளேன் ரஜினிகாந்த் பேட்டி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்திருந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

ஸ்ரீதேவி மரணம்: தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது…