தேசிய விருது பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜோதிகா

  • IndiaGlitz, [Tuesday,February 16 2016]
இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'குற்றம் கடிதல்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் கலந்து கொண்டு பல விருதுகளை குவித்தது. ஒரு ஆசிரியையின் அவசர செயல் காரணமாக ஒரு சிறுவனின் உயிர் ஊசலாடுவதை இந்த படத்தில் மிக பிரம்மாதமாக பிரம்மா இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பிரம்மா அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அவர் ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
'36 வயதினிலே' படத்திற்கு பின்னர் நல்ல கதைக்காக காத்திருந்த ஜோதிகா, பிரம்மாவின் கதையை கேட்டு அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. எனவே மிக விரைவில் ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த தகவலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

More News

நையப்புடை ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையதளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடித்த 'நையப்புடை'...

விஜய் 60 படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் கீர்த்தி சுரேஷ்

'தெறி' படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்...

சி.வி.குமாரின் அடுத்த படத்தில் 10 ஓநாய்கள்

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றிவாகை சூடி வரும் தயாரிப்பாளர் சி.வி.குமார்...

அஜித், பவன்கல்யாணுக்கு கிடைத்த புதிய சகோதரர்

தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகர்களான அஜித் மற்றும் பவன்கல்யாண் ஆகியோர்களின் படங்களுக்கு சமீபத்தில் வில்லனாக நடித்தவர் கபீர்சிங்

விக்ரம்குமாரின் 24: சூர்யா-நித்யாமேனன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள "24" படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...