கன்னட ரீமேக் திகில் படத்தில் ஜோதிகா?

  • IndiaGlitz, [Friday,November 25 2016]

பிரபல நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த ஆண்டு நடித்த '36 வயதினிலே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியிருந்தார்.
அதன்படி தற்போது அவர் 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் 'மகளிர் மட்டும்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜோதிகா மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லோஹித் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகியுள்ள 'Mummy Save me' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா உபேந்திரா நடித்த இந்த திகில் படம் வரும் டிசம்பர் 2-ல் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் படத்தையும் லோஹித் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.