நயன்தாரா, ஓவியாவை அடுத்து ஜோதிகாவிற்கு கிடைத்த பெருமை!

  • IndiaGlitz, [Thursday,August 01 2019]

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது ரிலீஸ் ஆகும் தினத்தில் அதிகாலை காட்சி திரையிடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது.

இருப்பினும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் மிக அரிதாகவே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதுவரை நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா', ஓவியாவின் '96ml' உள்பட ஒருசில படங்கள் மட்டுமே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் தற்போது ஜோதிகாவின் 'ஜாக்பாட்' திரைப்படமும் நாளை அதிகாலை காட்சி திரையிடப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் நாளை அதிகாலை 5.30 மணி காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள ஜாக்பாட்' படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படம் அனந்தகுமார் ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் சிறப்பான புரமோஷனால் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 

More News

பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறாரா கஸ்தூரி: அவரே கொடுத்த விளக்கம்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் சமீபத்தில் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய நான்கு போட்டியாளர்கள்

விஜய்சேதுபதிதான் காரணம்: மொட்டை கடிதத்திற்கு விளக்கமளித்த சேரன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு வந்த மொட்டை கடிதத்திற்கு விளக்கமளித்த நிலையில் சேரனிடம் கேட்கப்பட்ட கேள்வியான

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் சச்சின் தெண்டுல்கர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்

சாக்சி என்னை காலி பண்றா? கவின் ஆவேசம், லாஸ்லியா கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் கவின் சாக்சி, லாஸ்லியா என்ற முக்கோண காதல் விவகாரம் கடந்த இரண்டு வாரங்களாக உச்சக்கட்டத்தில் உள்ளது. கவின், சாக்சி இடையேயான காதல் நேற்று பிரேக் அப் ஆகிவிட்டது.

'பிக்பாஸ்' அபிராமி குறித்து 'நேர் கொண்ட பார்வை' நாயகி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு நூலிழையில் தப்பித்து வரும் அபிராமி இந்த வாரமும் நாமினேஷனில் இருந்தாலும், அவருக்கு கிடைத்து கொண்டிருக்கும்