இராவண கோட்டத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Tuesday,April 30 2019]

'மதயானைக்கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் அடுத்த படமான 'இராவண கோட்டம்' என்ற படத்தின் நாயகனாக கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்திற்கு தளபதி விஜய் வாழ்த்து தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது இசையமைப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்காக அவர் ஏற்கனவே மூன்று சூப்பரான டியூன்கள் கம்போஸ் செய்துவிட்டதாகவும் சாந்தனு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் ஏற்கனவே 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஆரஞ்சு மிட்டாய்', 'ஒருநாள் கூத்து, 'உள்குத்து' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தற்போது இவர் தமிழ், தெலுங்கு என மொத்தம் ஏழு படங்களுக்கு இசையமைத்து பிசியான இசையமைப்பாளராக உள்ளார்.

கண்ணன் ரவி தயாரிக்கும் 'இராவண கோட்டம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

More News

தங்கமங்கை கோமதிக்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உதவிகளும் குவிந்து வருவது தெரிந்ததே.

ஆணிவேர்ல இருந்து ஆரம்பிக்கிறதுதான் அழகு! 'என்.ஜி.கே' டிரைலர் விமர்சனம்

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அவர் கிரிக்கெட்டுக்கும் மட்டும் 'தல' அல்ல: கமல், விக்ரம் பட இயக்குனர் கருத்து

கூல் கேப்டன், மேட்ச் ஃபினிஷர், சிறந்த கேப்டன்ஷிப், அதிரடி பேட்ஸ்மேன் உள்பட பல பெருமைக்கு சொந்தக்காரரான 'தல' தோனி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியை கரையேற்றி வருகிறார்.

'அசுரன்' படம் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது.

இந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்

இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது