ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல். வாடிவாசல் திறப்பது எப்போது?

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

சென்னை மெரீனா, மதுரை அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசர சட்டம் இயற்றாவிட்டாலும், மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தரும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததை அடுத்து தமிழக முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழக அரசே அவசர சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையின் அடிப்படையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு, அந்த சட்டத்தை சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஜல்லிக்கட்டுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஜனாதிபதி இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஒரே ஒரு படி மட்டுமே பாக்கியுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் இருந்து டெல்லி திரும்பியதும் இந்த அவசர சட்டத்தில் கையெழுத்திடுவார் என்றும் அதன் பின்னர் அதை தமிழக ஆளுனர் சட்டமாக்குவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே அலங்காநல்லூர் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாடிவாசல் திறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதும் மாணவர்களின் புரட்சி போராட்டம் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் கடந்த நான்கு நாட்களாக மெரீனாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார். போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து பொருட்களுக்காக ரூ.1 கோடி கூட செலவு செய்ய தயார் என்று நேற்று அறிவித்திருந்தார்...

இலவச செக்ஸ்ன்னா இதைவிட அதிகமா கூடுவாங்க- ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்திய ராதா ராஜன்

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின்றி, எந்த ஒரு தனிப்பட்ட...

நான் பீட்டா உறுப்பினர் அல்ல. செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. எப்படியும் இந்த போராட்டத்தில் வென்றே தீருவது...

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை...

ஐபிஎல் கிரிக்கெட் போல இனி ஜல்லிக்கட்டு லீக். நடிகர் வீரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன் நேற்று முன் தினம் இரவு முதல் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் பலரசிகர்களும் நடிகர்களும் உட்கார்ந்து போராடி வருகின்றனர்...