உடுமலை சங்கர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் மரணம்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய சம்பவம் உடுமலையில் சங்கர் என்ற இளைஞர் கெளரவக்கொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த கொலை வழக்கில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட ஆறு பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியவர் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் என்பவர்

இந்த நிலையில் நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீதிபதி அலமேலு நடராஜன் அவர்களது மறைவுக்கு சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

பிப்ரவரி 21 முதல் தொடங்கும் பயணத்திட்டத்தின் பெயர்: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

ரஜினிகாந்த் முதலில் டெல்லியில் இருந்துதான் தொடங்க வேண்டும்: அமீர்

ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியல் குறித்து திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த மடாதிபதியை மன்னிக்கலாமா? பாரதிராஜா

காஞ்சி மடத்தை சேர்ந்த விஜயேந்திரர் சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்ததாக கூறப்படும் சர்ச்சை

லட்சுமி ராமகிருஷ்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும்: அருவி நடிகை

சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'அருவி. 100 வருட சினிமாவுலகில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இந்த படத்தை கூறலாம்.

ஜெய் படத்தில் இணையும் ஜிமிக்கி கம்மல்

ஜெய் நடிப்பில் சமீபத்தில் 'பலூன்' திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்தில் நடித்து வருகிறார்.