close
Choose your channels

கடும் சோதனையில் பூத்த கனவு… பரதநாட்டியத்தில் கலக்கும் திருநங்கை பொன்னி!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலை எல்லோருக்கும் சமமானது என்று சாதித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை பொன்னி. திருநங்கையாக இருந்து பல்வேறு சோதனைகளுக்கு இடையே தான் கற்றுக்கொண்டிருக்கும் கலையைத் தற்போது இலவசமாக அனைவருக்கும் கற்றுக்கொடுக்கவும் துவங்கியிருக்கிறார்.

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. சிறுவயது முதலே படிப்பு, கணிதம் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து பரதநாட்டியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக 8 ஆம் வகுப்பு பயிலும்போது அருகில் இருந்த ஒரு நடனப்பள்ளியில் சேர்ந்து கொள்வதற்கு ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவரிடம் காணப்பட்ட பாலின வேறுபாட்டைக் கண்ட ஆசிரியர்கள் பொன்னியைத் தட்டிக் கழித்திருக்கின்றனர். ஆனாலும் முயற்சியைக் கைவிடாத பொன்னிக்கு துவக்க பயிற்சியை அளித்தனர். இப்படியே பரதநாட்டியத்தில் கால்பதித்த பொன்னி 2008 இல் சென்னைக்கு வந்திருக்கிறார்.

அதுவரைக்கும் சட்டை, பேண்ட் அணிந்திருந்த பொன்னி தனக்கிருந்த பாலின வேறுபாட்டை முழுவதுமாக ஒப்புக்கொண்டு சேலை அணியத் துவங்கியிருக்கிறார். இதனால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்ததாகக் கூறும் பொன்னி பரதநாட்டியம் பயில்வதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்திருக்கிறார். ஆனால் யாரும் இவருக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுக்க முன்வராத நிலையில் கணிதத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக பிஎஸ்சி படிக்கத் துவங்கியிருக்கிறார். ஆனாலும் பொருளாதாரத்தில் நொடிந்துபோன அவர் மூட்டை தூக்கியே தனது வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

இந்நிலையில் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்ட பொன்னிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் படிப்பை தொடரமுடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். இதையடுத்து ஒருவழியாகத் தனது கலைத்தேடலை துவங்கிய பொன்னிக்கு திருவான்மியூரைச் சேர்ந்த நட்டாச்சாரிய சிவக்குமார் என்பவர் அடைக்கலம் கொடுத்து முறையாகப் பரதம் கற்றுக்கொடுத்ததோடு பொருளாதார ரீதியாகவும் உதவிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரதத்தில் எம்.ஏ படிக்கும் அளவிற்கு உயர்ந்த பொன்னி தற்போது பல மேடைகளில் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு ஊர், ஊராகச் சென்று தனக்கிருக்கும் கலைத் திறமையை மக்கள் முன்னிலையில் கவனப்படுத்தி வருகிறார். இதனால் திருநங்கைகள் குறித்து மக்களின் பார்வையை மாறும் என்றும் கூறிவருகிறார்.

மேலும் 2 மாணவர்களுடன் இலவசமாக பரதப் பயிற்சியைத் துவங்கிய அவர் தற்போது 32 மாணவர்களுக்கு பரதத்தைக் கற்றுக்கொடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். பரதநாட்டியம் மீது ஆர்வம் காட்டிய பொன்னி தற்போது தனது கனவில் சாதனை படைத்ததோடு ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் ஒரு நம்பிக்கை வழியைக் காட்டியிருக்கிறார் என்பதே நிதர்சனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment