ஜானி மாஸ்டர் கைது விவகாரம்.. அவரது மனைவி சொன்னது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி தன்னுடைய உதவி நடன இயக்குனர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து அவரது மனைவி ஆயிஷா அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான ஜானி, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சில வருடங்கள் கழித்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகார் மீது தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போது ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆயிஷா, இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தன்னுடைய கணவரை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்றும், 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது முழுக்க முழுக்க பொய் என்றும் ஒரு குற்றச்சாட்டை வைக்கும் முன் தகுந்த ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜானி மாஸ்டர் பெயருக்கு களங்கம் விளைவிக்க ஒரு பெரிய சதி நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி இந்த விவகாரம் குறித்து ஏன் அந்த பெண் இத்தனை வருடங்களாக புகார் அளிக்கவில்லை என்றும் இப்போது திடீரென புகார் அளிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

⚜️வேல் மாறல் மகா மந்திரம் படிப்பது எப்படி.? மந்திரத்தின் சக்தி மற்றும் பயன்கள் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

வேல் மாறல் மகா மந்திரம்: முருகனின் சக்தி மற்றும் உங்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

கொழுந்துவிட்டு எரியும் பிரியங்கா விவகாரம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மணிமேகலை..!

ஒரு பக்கம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா சம்பந்தப்பட்ட விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தனது கணவருடன்

'புஷ்பா 2' திரைப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்? வைரலாகும் புகைப்படம்..!

அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சிறப்பு தோற்றத்தில்

தமிழ் சினிமாவில் புதிய சாதனை.. கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படம் குறித்த ஆச்சரியமான தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்,

இன்று மாலை 'வேட்டையன்' இசை வெளியீடு.. அதற்குள் வெளியான செகண்ட் சிங்கிள் 'Hunter Vantaar'..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின்