அமிதாப், அபிஷேக்கை அடுத்து ஐஸ்வர்யாராய்க்கும்  வாழ்த்து கூறிய ஹாலிவுட் பிரபலம் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பதும், முதலில் அமிதாப், அபிஷேக் மட்டும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யாராய் மற்றும் ஆராதித்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமிதாப்பச்சனும் அவருடைய குடும்பத்தினரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்திய திரையுலகினர்களும் பிரார்த்தனை செய்தும், வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரும் WWE விளையாட்டு வீரருமான ஜான்சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் புகைப்படங்களையும் பதிவு செய்து இருவரும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார் என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று ஐஸ்வர்யாராயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜான்சேனா, அவரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அமிதாப் குடும்பத்தினர் மீது ஜான்சேனா எந்த அளவு மரியாதை வைத்துள்ளார் என்பதை இந்த பதிவுகள் காண்பிப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

More News

இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை: 'ஓமை காட்' படகுழுவினர் இன்ப அதிர்ச்சி

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உள்பட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் 'ஓமை கடவுளே'. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில்

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தில் திருட்டு: சென்னையில் பரபரப்பு

சென்னையில் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம கும்பல் ஒன்று பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஃபேஸ்புக் மூலம் வீசிய காதல் வலை: இளைஞரிடம் ஏமாந்த 28 வயது திருமணமான பெண்!

ஃபேஸ்புக் மூலம் பேசிய காதல் வலையில் விழுந்த திருமணமான 28 வயது பெண் ஒருவர், 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சின்னத்திரை படப்பிடிப்பில் திடீர் தீவிபத்து: நூலிழையில் உயிர்தப்பிய நடிகர், நடிகைகள்!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் அமலில் இருந்துவரும் காரணத்தால் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன

இன்று ஒரே நாளில் 88 பேர் பலி: அதிகரிக்கும் கொரோனா பலியால் பரபரப்பு

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது மட்டுமின்றி கடந்த சில நாட்களாக கொரோனாவால் பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது