தப்பு பண்ணா தப்பிக்க முடியாது: மீரா மிதுன் கைது குறித்து ஜோ மைக்கேல்!

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]

தப்பு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது என நடிகையும் சூப்பர் மாடலுமான மீராமிதுன் கைது குறித்து ஜோ மைக்கல் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நடிகையும் சூப்பர் மாடலுமான மீராமிதுன் சமீபத்தில் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்ட மீராமிதுன் என்னை யாராலும் கைது செய்ய முடியாது என்றும் ஐந்து ஆண்டுகளாக என்னை கைது செய்ய முயற்சி செய்கிறார்கள் என்றும் ஆனால் தன்னை கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும் என்றும் போலீசாருக்கு சவால் விட்டார்.

இந்த நிலையில் மீராமிதுனின் செல்போன் சிக்னலை வைத்து அவர் கேரளாவில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் சில மணி நேரங்களுக்கு முன்னர் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மீராமிதுன் கைது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ மைக்கேல் பதிவு செய்திருப்பதாவது: விஜய், சூர்யா ரசிகர்களுக்கும் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி., மீரா மிதுன் கைது. கைதுக்கு முன்னர் அவரது இறுதி நாடகத்தை இந்த வீடியோவில் பார்க்கலாம். தப்பு பண்ணா தப்பிக்க முடியாது சூப்பர் மாடலின் நாடகம் முடிந்து விட்டது, கடைசியில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்று கூறி மீராமிதுன் கைதுக்கு முன் செய்த வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.
 

More News

கால் தெரியும்படி செருப்பு அணியக்கூடாது? ஆப்கனில் மோசமாகும் பெண்கள் நிலை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக ஏராளமான பெண்கள்,

தளபதி விஜய் படம் குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பதும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் அவர்

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கு.....! நடிகை மீரா மிதுன் அதிரடி கைது....!

பிக்பாஸ்  நிகழ்ச்சி மூலம் சர்ச்சைகளில் பிரபலமான நடிகை தான்  மீரா மிதுன்.

அஜித்துக்கு பாடினேன் என்று கடைசி வரை தெரியாது: அனுராக் குல்கர்னியின் ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலை பாடிய அனுராக் குல்கர்னி கடைசிவரை இந்த பாட்டை நான் யாருக்காக பாடினேன்

மதுரை ஆதீனத்தின் அடுத்த மாடாதிபதி யார்? நித்யானந்தாவின் கனவு?

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி அருணகிரிநாதர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.