ரிலீஸூக்கு முன்பே ஜீவா படத்தை பார்த்த 50 பேர்

  • IndiaGlitz, [Saturday,February 20 2016]
ஜீவா, ஹன்சிகா, சிபி நடித்த 'போக்கிரி ராஜா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸுக்கு முன்பே 50 பேர் பார்த்து படம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை முடிப்பதற்கு முன்னர் இயக்குனர் ராம்பிரகாஷ் 50 பேர்களுக்கு இந்த படத்தை போட்டுக்காட்டு அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அதன் பின்னரே இந்த படத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துள்ளாராம். படம் பார்த்து வெளியே வரும்போது மக்கள் சொல்லும் குறைகளை படம் ரிலீஸுக்கு முன்பே கேட்டறிந்து மக்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த படத்தை இயக்குனர் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் 25வது படமான 'போக்கிரி ராஜா' படத்திற்கு டி.இமான் இசையமைக்க அதை பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளர்.