அட்லியின் அடுத்த படத்தில் ஜீவா

  • IndiaGlitz, [Friday,February 26 2016]

ஜீவாவின் 25வது படமான 'போக்கிரி ராஜா' ரிலீஸுக்கு தயாராகி வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் 'திருநாள்' மற்றும் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சத்தமின்றி அடுத்த படத்திலும் கமிட் ஆன ஜீவா, அந்த படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பழநி அருகே ஆரம்பமாகியுள்ளதாகவும், அந்த பகுதியில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்த படத்திலும் 'கவலை வேண்டாம்' படத்திலும் ஜீவா மாறி மாறி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

More News

இயக்குனராக மாறிய விஜய் ரசிகர்

இளையதளபதி விஜய்யின் பெயருக்கே ஒரு கிரேஸ் உண்டு என்பதை அவருடைய தந்தை எஸ்.ஏ.சி கூறியதை சற்று முன்னர் பார்த்தோம்...

அருள்நிதியின் 'ஆறாது சினம்'. ஒரு முன்னோட்டம்

கடந்த ஆண்டு அருள்நிதி நடித்த 'டிமாண்ட்டி காலனி' மற்றும் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது மட்டுமின்றி...

அதர்வாவின் 'கணிதன். ஒரு முன்னோட்டம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த முரளியின் திரையுலக வாரிசான அதர்வா, கடந்த 2010ஆம்...

'புலி'க்கு நஷ்ட ஈடு கொடுக்கும் 'போக்கிரி ராஜா'

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'புலி'...

என் மகனுக்கு விஜய்ன்னு ஏன் பேர் வைச்சேன் தெரியுமா? எஸ்.ஏ.சி

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய் என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்ட நிலையில் இன்று விஜய்யின் தந்தைதான் எஸ்.ஏ.சி என்று கூறும் அளவுக்கு விஜய்யின் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது...