ஒரே நாளில் இரண்டு 'திருநாள்' கொண்டாடும் ஜீவா

  • IndiaGlitz, [Friday,August 05 2016]

கிராமத்து ரெளடி 'பிளேடு' பாத்திரத்தில் ஜீவா நடித்துள்ள 'திருநாள்' இன்று வெளியாகிறது. கடந்த சில வருடங்களாக இறக்கத்தில் இருந்து வரும் ஜீவாவுக்கு இந்த படம் ஒரு புதிய ஏற்றமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் சிறப்பாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'திருநாள்' படத்தை தயாரித்த எம்.செந்தில்குமார் மீண்டும் ஜீவாவுடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுடன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
எம்.செந்தில்குமார் தயாரிப்பில் ஜீவாவின் 'திருநாள்' படம் ரிலீஸாகும் அதே நாளில் அதே தயாரிப்பாளரின் படத்தில் ஜீவாவின் இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இன்று ஜீவா இரண்டு திருநாள்களை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.