இப்ப நல்லவங்கள பத்தி படம் எடுத்தா யாரும் பாக்குறதில்லை... 'ஜிகர்தண்டா 2' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,November 04 2023]

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் மூன்று நிமிடங்கள் உள்ள இந்த ட்ரைலரில் உள்ள காட்சிகள் அசத்தலாக இருப்பதை எடுத்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜிகர்தண்டா’ முதல் பாகத்தில் சித்தார்த் இயக்குனராகவும், பாபி சிம்ஹா நடிகராகவும் நடித்த நிலையில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா இயக்குனராகவும், ராகவா லாரன்ஸ் நடிகராகவும் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படத்தை எஸ்ஜே சூர்யா எப்படி இருக்கிறார்? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பதை ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

மொத்தத்தில் டிரைலரில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது கார்த்திக் சுப்புராஜ் முதல் பாகம் போலவே இந்த இரண்டாவது பாகத்தையும் அசத்தலாக இயக்கி இருப்பார் என்று தெரிகிறது.

’எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது, பேனாவை கெட்டியா பிடிச்சுகிட்டா போதும், எழுதப்பட்டது எழுதப்படும்' என்ற வசனம், ’இப்பயெல்லாம் நல்லவங்கள பற்றி படம் எடுத்தால் யாரும் பாக்குறது இல்ல’ என்ற வசனம், ’இந்த தீபாவளிக்கு ஊரையே அமர்க்களப்படுத்துறோம்’ போன்ற வசனங்கள் இந்த ட்ரெய்லரில் ஹைலைட்டாக உள்ளது.

மொத்தத்தில் தீபாவளி விருந்தாக இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் ஹைலைட்டாக உள்ளது.