என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பு: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,September 11 2024]

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பை தனது கணவர் வெளியிட்டுள்ளதாக அவருடைய மனைவி ஆர்த்தி கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல....

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.

தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமன்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

More News

NEEK படத்தை அடுத்து மேலும் 2 படங்கள் இயக்கும் தனுஷ்.. அதில் ஒன்று ஹீரோயின் சப்ஜெக்ட்..!

நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து இரண்டு படங்களை அவர் இயக்க திட்டமிட்டு

ஜெயம் ரவியின் பிறந்த நாளில் 3 பட அப்டேட்டுகள்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

நடிகர் ஜெயம் ரவி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன.

ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர் இந்த பிரபலமா? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு..!

நடிகர் ஜெயம் ரவி தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்தை இயக்குவது பிரபல இயக்குனர் என்ற தகவல் கசிந்துள்ளதை

ஆந்திரா, தெலுங்கானா வெள்ளம்.. நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்த மாஸ் தமிழ் நடிகர்..!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்

உங்கள் ராசிக்கு எந்த முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஜோதிட நிபுணர் சுபம் D.R. விஜயகுமார் அளித்த சிறப்பு பேட்டி, 12 ராசிகளுக்கும் ஏற்ற முருகன் மற்றும் அம்மன் கோவில்களை அடையாளம் காட்டியுள்ளது.