ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு.. குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி கொடுத்த உத்தரவாதம்..!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

ஜெயம் ரவி ரசிகர் ஒருவர் சமீபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி கொடுத்த உத்தரவாதம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் ரசிகர் ஒருவர் சமீபத்தில் எதிர்பாராத வகையில் காலமானார். ராஜா என்ற அந்த ரசிகர் மறைந்த தகவலை கேள்விப்பட்டவுடன் உடனே ஜெயம் ரவி அவருடைய வீட்டுக்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அவரது குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் இருந்த ஜெயம் ரவி அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மறைந்த ரசிகர் ராஜாவின் மகளிடமும் சில நிமிடங்கள் அன்புடன் பேசினார். இதன்பிறகு ராஜா குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம் என்றும் தயங்காமல் உங்கள் குடும்பத்தினர்களின் ஒருவரைப் போல் என்னை நினைத்து எந்த உதவி கேட்டாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஜெயம் ரவி உறுதிமொழி கொடுத்துள்ளார்.

மறைந்த ரசிகர் ராஜாவிற்கு ஜெயம் ரவி மரியாதை செலுத்திய புகைப்படம், அவரது குடும்பத்தினருடன் பேசிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.