close
Choose your channels

ரஜினி, விஜய்யை அடுத்து ஜெயம்ரவி?

Friday, December 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த பல படங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன் 2', ஜி.வி,பிரகாஷ் நடிக்கும் படம் மற்றும் கத்தி தெலுங்கு ரீமேக் படம் ஆகியவற்றை தற்போது தயாரித்து வரும் நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி தற்போது மிருதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஜெயம் ரவி, கவுதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார்.

இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment