ரஜினி, விஜய்யை அடுத்து ஜெயம்ரவி?

  • IndiaGlitz, [Friday,December 18 2015]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்த லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்தடுத்த பல படங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன் 2', ஜி.வி,பிரகாஷ் நடிக்கும் படம் மற்றும் கத்தி தெலுங்கு ரீமேக் படம் ஆகியவற்றை தற்போது தயாரித்து வரும் நிலையில் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி தற்போது மிருதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஜெயம் ரவி, கவுதம் மேனன் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிப்பார் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார்.

இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பீப் பாடல் விவகாரம். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

பீப் பாடல் விவகாரம் குறித்து கோவை காவல்நிலையத்தில் நடிகர் சிம்பு நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில்...

இளையராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் குறித்த கேள்விக்கு இசைஞானி இளையராஜா கோபமாக பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்டதாக நேற்று செய்திகள் ...

சிவாஜி சிலை அகற்றும் வழக்கில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு

சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலையை அகற்றும் வழக்கு குறித்து இன்று விசாரணை ...

தனுஷின் 'தங்கமகன்' படத்திற்கு டபுள் சென்சுரி அந்தஸ்து

இந்தியாவிலேயே அதிக திரைப்படங்கள் ரிலீஸ் செய்யும் கோலிவுட் திரையுலகில் வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளியாகின்றது...

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் இணையும் தனுஷ்-சமந்தா-அனிருத்

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், கிட்டத்தட்ட தனுஷின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்...