எம் ராஜேஷ் இயக்கிய படம் எதுவுமே காமெடி படம் இல்லை, நாம தான் தப்பா புரிஞ்சிகிட்டோம்: ஜெயம் ரவி

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் ’இயக்குனர் எம் ராஜேஷ் படங்கள் எல்லாமே ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படங்கள் தான், அதில் காமெடியும் இருக்கும், ஆனால் அவர் முழுக்க முழுக்க காமெடி படத்தையே எடுத்திருப்பதாக நாம் நம்பி விட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்

எம் ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பிரதர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’எம் ராஜேஷ் படங்கள் எல்லாமே காமெடி படங்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவருடைய முந்தைய படங்களை பார்த்தால் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் படமாக தான் இருக்கும். அந்த பேமிலி சப்ஜெக்ட் படத்தில் காமெடியும் இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் காமெடியை அதிகமாக தனது படத்தில் சேர்ந்ததால் அவரது படங்கள் காமெடி படங்கள் என்று நாம் நம்பி விட்டோம்.

ஆனால் ’பிரதர்’ படத்தில் அவர் மீண்டும் தனது பழைய பாணியில் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட் கதையை என்னிடம் கூறிய போது எனக்கு அந்த கதை பிடித்து விட்டது. நானும் நிறைய ஆக்சன் படங்கள் செய்து விட்டதால் ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டில் நடிக்கலாம் என்பதால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்த படத்திலும் அவரது ஸ்டைலில் காமெடி இருக்கும், அதே நேரத்தில் டான்ஸ், பேமிலி சப்ஜெக்ட் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும். எனவே நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது வித்தியாசமான படமாக ’பிரதர்’ இருக்கும் என்று ஜெயம் ரவி தெரிவிதுள்ளார்.

More News

இந்த மாதிரி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை.. 'எல்.ஐ.சி' நடிகர் குறித்து விக்னேஷ் சிவன்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது 'எல்ஐசி' என்ற 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிப்பு அரக்கன் குறித்து தனது சமூக வலைதளத்தில்

ஹாட்ஸ்டாரின் அசத்தல் அறிவிப்பு..இதயத்தை வருடும் புதிய சீரிஸ்..!

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பல புதிய வெப் சீரிஸ் அவ்வப்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது ஒரு மருத்துவமனையின் பின்னணியில், இளமை துள்ளும்

இயக்குனர் கனவில் இருந்த 'அஞ்சாதே' நடிகர் திடீர் மரணம்.. என்ன ஆச்சு?

'அஞ்சாதே' படத்தில் நடித்த நடிகர் விரைவில் இயக்குனராக போகும் கனவில் இருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு திணறல் காரணமாக காலமாகிவிட்டார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திரைக்கு வரும் முன்பே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிவகார்த்திகேயன் படம்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி வரும் 'கொட்டுக்காளி' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் சர்வதேச

திடீரென போலீசில் புகார் அளித்த மகேஷ்பாபுவின் மனைவி: ஒரே மகளுக்கு என்ன பிரச்சனை?

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஹைதராபாத் காவல் துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.